திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் கோவிலில், 203-ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவின் 11வது நாளில் கூத்தாண்டவர் பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் ஒரே சீருடையில் கடலைமாவு, எள்ளுபொடி, சுண்டல், நவதானியங்கள் உள்ளிட்ட தட்டு வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர்.