கலைஞர் நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை அலங்காரம் செய்ததில் எந்த தவறும் இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் அதை விமர்சிப்பது தான், ஒரு சிலரது கடமையாகவும், தினக்கூலியாக இருப்பதாக தெரிவித்தார்.