சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பக்தரின் நகை திருடியது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் ஊழியர், போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. அவரது சடலம் எங்கே? என கேட்டு உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மடப்புரம் கோயிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த அஜித், பக்தரின் காரை பார்க்கிங் செய்யும்போது அதில் இருந்த தங்க நகையை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை... கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேங்கியதால் பயணிகள் அவதி