கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. குப்பைகள் தீப்பிடித்து எரிவதால் அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவம் நிலையில், தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.