இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம்,பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் விடுதலை, படகு உள்ளிட்ட உடைமைகளை உடனடியாக விடுவிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.