திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ராமர் பஜனை மடத்தில், ராமநவமி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சீதாராமர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சீதாராமர் சிலைக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பின்னர் பலவகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். அதில் தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள், சம்பிரதாய கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன.