Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 03:09 AM
By: Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு மதுபானக் கடையில் விற்பனையாளர்கள் இருவர் பரஸ்பரம் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி வெளியான நிலையில், சூப்பர்வைசர் உள்பட ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கீழவளத்தில் இயங்கிவரும் மதுபானக் கடையில் விற்பனையாளர்களாக வேலை பார்க்கும், வல்லவன் மற்றும் பாரதி ஆகிய இருவரும் கடைக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சூப்பர் வைசர் கமலக்கண்ணன் தடுத்தும் இருவரும் தாக்கிக் கொண்டதில் பாரதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved