தமிழ்நாட்டில் முதல் முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக குளிர்சாதன ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. வெயில், மழை போன்ற கடினமான சூழலிலும் தங்களது பணியை தொய்வின்றி செய்து வரும் ஊழியர்களுக்கென குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கென பிரத்யேகமான குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. 600 சதுர அடி பரப்பளவில் அமையும் இந்த ஓய்வறையில், கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் , பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், கே.கே.நகரில் ஓய்வகங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.