ராமேஸ்வரம்- சென்னை விரைவு ரயிலின் எஞ்சின் திடீரென பழுதாகி, சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் நின்றதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எஞ்சினை சரி செய்ய ஓட்டுநர் நீண்ட நேரம் போராடியும் முடியாமல் போனதால், மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.