Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் ஒரு வாரமாகியும் வடியாததால் மிகுந்த அவதி அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதுடன், துர்நாற்றமும் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மழைநீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved