சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால், பழமை வாய்ந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் இளையான்குடியில் இருந்து மானாமதுரை செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.