Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் மழைநீர் தேங்கி சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அழுகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆதிரெங்கம், நாகலுடையான்இருப்பு, பிச்சன்கோட்டகம், தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வடிகால் வாய்க்கால்களை தூர்வாராத காரணத்தால் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை எனக் கூறிய விவசாயிகள், அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved