Also Watch
Read this
By: Web Team

தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். அரசு வழக்கறிஞர் கல்பனா வழக்கை எதிர்மறை இன்றி நடத்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 10 ஆயிரம் கொடுத்த நிலையில், பின்னர் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்த போது கையும், களவுமாக சிக்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved