திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் சேர்மனாக இருந்த நபர், பதவி காலம் முடிந்தும் தனது காரில் சேர்மன் என பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பலகையுடன் சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் சேர்மனாக இருந்த அதிமுகவை சேர்ந்த சிவக்குமாரின் பதவி காலம் கடந்த ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைந்தது.ஆனால் தற்போது வரை அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களது சொகுசு கார்களில் சேர்மன் என பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பலகையுடன் சுற்றி வருகின்றனர்.