Also Watch
Read this
கலைஞர் கனவு இல்ல பயனாளியின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

வேலூரில் மு.க.ஸ்டாலின்
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் உரையாடினார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை
இதுதொடர்பாக தமது பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
இன்று, கே.வி.குப்பம் தொகுதியில், காலை பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.

ரூ.8,000 கூப்பன்
அடுத்து, "இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என, அவரிடம் கேட்டேன். 2026 தேர்தல் Votingக்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு. தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கி கொள்ளலாம். ஆனால், அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice' ஆகத் தான் இருக்கணும்.

தமிழ்நாடா? டில்லியா?
அவர்கள் தான் 'இல்லத்து அரசிகள், குடும்பத் தலைவிகள்'. 2026 Votingல் "தமிழ்நாடு அணியா - டில்லி அணியா?" என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள் தான்' எனச் சொல்லணும், பெண்கள் தான் எப்பவுமே வெல்லணும். #VoteForDMK # வெல்வோம்_ஒன்றாக.
இவ்வாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved