Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 10:55 AM
By: Manigandan Raja

சென்னை, ஆலந்தூரில் உள்ள நியாய விலைக் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved