வேலூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடியை அடுத்த அருப்புமேட்டை சேர்ந்த தினேஷ் என்பவர் கீர்த்தனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தனா 4 மாதம் கர்ப்பமாக இருந்து நிலையில், திடீரென வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மருத்துவமனை கழிப்பறை ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.