மதுரை ஆதீனத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி செல்வராஜ், மதுரை ஆதீனம் மதமோதலை தூண்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டை பரப்பியுள்ளார் எனவும், மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவதுடன் அவர் இவ்வாறு பேசியதற்கு பின்புலமாக இருந்தது யார் என விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.