சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பதிவாளர் மற்றும் 4 துணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இணைப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பதிவாளர்கள் நெல்சன் ,கவிதா, கந்தசாமி, குழந்தைவேல் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தன் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த பணியிட மாற்றத்தை துணை வேந்தர் செய்திருப்பதாக பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் தெரிவித்தனர்.