பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியலில் நான்கு கோடியே 67 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக உண்டியல் நிரம்பியதையடுத்து, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் திறக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காணிக்கையை எண்ணினர்.