அரியலூரில் நகை அடகு கடையில் ஒன்றரை கிலோ தங்கநகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில், அதே கடையில் வேலை செய்து வந்த நபர் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசாத் லோடா என்பவர் நடத்தி வரும் ஸ்ரீஅரிஹந்த் சிவன் பேங்கர்ஸில் பாதுகாப்பு இல்லை என கூறி, அங்கு அடகு வைக்கும் நகைகள் மற்றும் பணத்தை சுப்பிரமணியர் கோயில் தெருவில் உள்ள தனது மைத்துனர் கடையில் தினமும் கொண்டு சென்று வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆசாத் லோடாவின் கடையில் வேலை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்து கணையா லால் என்பவர் அடகுக்கடையில் இருந்த ஒருகிலோ தங்கம், எட்டரை கிலோ வெள்ளி மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.