அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் பூரண மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற 2-ம் தேதி விசிக மகளிர் அணியினரின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளின் மகளிர் அணி நிர்வாகிகளும் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.