புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என போலீஸார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தனியார் நட்சத்திர விடுதிகளின் இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் போலீஸார் அறிவுறுத்தல் வழங்கினர்.