2 மணி நேரத்துக்கும் மேலான வாண வேடிக்கை, அதிர்வேட்டு சத்தத்துடன் கோலாகலமாக நடைபெற்ற கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை வடகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது