பெண்கள் குறித்து தவறாக பேசிய, அமைச்சர் பொன்முடியை கட்சி பதவியில் இருந்து நீக்கியது போதாது என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் பொன்முடி பெண்களை பற்றி இப்படி பேசியிருக்க கூடாது என்றார்.