ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்க வந்த நிகழ்ச்சிக்காக, சாலையில் கிருமி நாசினிக்காக போடப்படும் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெறும் சுண்ணாம்பு போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.