Also Watch
Read this
By: Web Team

மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை நள்ளிரவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப் பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து அங்கு குவிந்த அதிமுகவினர் சிலையை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் மர்மநபர்களை தேடி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved