திருவள்ளூரில் ஆறு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏற்கனவே வழங்கிய தங்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலிக்காமல் மீண்டும் கோரிக்கை மனுவை கொடுக்க அறிவுறுத்தியதை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். நெடுஞ்சாலை பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தரக்கோரி 800க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டினர்.இதையும் படியுங்கள் : நகர்மன்ற தலைவி மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம்... 23 கவுன்சிலர்கள் சேர்ந்து நகராட்சி ஆணையரிடம் கடிதம்