Also Watch
Read this
By: Manigandan Raja

ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–திருப்பூர் நான்கு வழிச்சாலையில் உள்ள வேங்கிப்பாளையம் அருகே இன்று ஈச்சர் சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் இருந்து மதுரை கப்பலூர் நோக்கி பார்சல் பொருட்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனத்தை முருகன் (54) என்பவர் ஓட்டிச் சென்றார். வேங்கிப்பாளையம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்தது. இருப்பினும், ஓட்டுநர் முருகன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved