Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பு. ஆதனூர் கிராமத்தில் திறந்து விடப்பட்ட ஏரி தண்ணீர், விளை நிலங்களில் புகுந்து சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மழை காரணமாக ஏரி நிரம்பிய நிலையில், ஏரியின் தெற்கு பக்க ஷட்டர் உயர்த்தப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததாகவும், வடிகால்வாயை சீரமைக்காமல் தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், ஏரி நீரானது சாலைகளிலும் வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved