Also Watch
Read this
Posted on: May 08, 2025 02:54 AM
By: Srini Vasan

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே லோடு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கையில் இருந்து பால் பாக்கெட் கவர்களை அட்டை பெட்டியில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்தார்.
மேலும், அட்டை பெட்டிகள் சாலையில் பைக்கில் சென்றவர்கள் மீது விழுந்ததால் இரண்டு பேர் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved