Also Watch
Read this
Posted on: Oct 17, 2024 02:41 AM
By: Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவில்பதாகை ஏரி நிரம்பி வெளியேறிவரும் உபரிநீரில் சிறுவர்கள் குளியல் போட்டும், மீன்பிடித்தும் விளையாடி வருகின்றனர்.
கோவில்பதாகை ஏரியின் உபரிநீர் கணபதி அவென்யூ வழியாக வெளியேறி வருவதால் குடியிருப்புகளை மார்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, ஆவடி - செங்குன்றம் சாலையில் இடுப்பளவு தண்ணீர் செல்வதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளனூர், மோரை, கண்ணியம்மன் நகர், அரக்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழல் உருவாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved