மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்கள் மதுரை எடுத்து செல்லப்பட்டன. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக மே 10 ஆம் தேதி கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட உள்ளார். இந்நிலையில், அழகரின் தங்க குதிரை, சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவை மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டன. தொடர்ந்து மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்த தங்க குதிரையை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.