Also Watch
Read this
By: Manigandan Raja

கச்சத்தீவு திருவிழா :
இலங்கை இந்தியா இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது இந்த திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பக்தர்களும் இந்தியாவில் இருந்து பக்தர்களும் பங்கு கொள்ள உள்ளனர்.
பிப்ரவரி 27ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் புறப்பட உள்ளது இந்நிலையில் 26 நாட்டுப் படகுகளும் 92 விசை படகுகளில் 3000துக்கும் மேற்பட்ட பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.
இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளின் தரம் அகலம் நீளம் மற்றும் உரிய ஆவணம் உள்ளதா என மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் கடல் சட்ட மேலாண்மை துறை அதிகாரிகள் கச்சத்தீவு திருப்பயணம் செல்லும் நாட்டுப் படகுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved