Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வங்கி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த பெண் ஊழியரை, வங்கி செயலாளர் கமலசேகர் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கேஷியர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் பணிகளை கூடுதலாக செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. தன்னிடம் இணக்கமாக இருக்கவும் வேண்டும் என அவர் வற்புறுத்தியதால் மனமுடைந்து விஷம் குடித்த பெண் ஊழியர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved