பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே பெண்களை சைட் அடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து ஏறுவதற்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். சைட் அடிப்பதில் பிரச்சனைஅப்போது பேருந்து நிலையத்திற்கு வழக்கமாக வரும் பெண்களை சைட் அடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை வழக்கம் போல பள்ளி வகுப்பு முடிந்து பிறகு பேருந்து நிலையத்திற்கு மாணவ, மாணவிகள் வந்துள்ளனர்.சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்பெண்களை சைட் அடிப்பதில் ஏற்பட்ட முன்விரோத பிரச்சனை காரணமாக மீண்டும் பேருந்து நிலையத்தில் மாணவர்களிடையே ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் இருக்கும் நிலையில் இன்று மாணவர்களிடையே தாக்கி கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Related Link இந்தியா திரும்பினார் அஜித்குமார்