திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காப்புகாட்டில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு காணாமல் போன அப்பகுதியை சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி முரளியின் எலும்புகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என விசாரணை நடந்து வருகிறது.