முத்துப்பேட்டை யூனியன் ஆபீஸ் சாலை திரும்பும் திருத்துறைப்பூண்டி சாலையில் கலையரசன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை மற்றும் ஜீஸ் கடை உள்ளது. நேற்று மாலை பரபரப்பாக வியாபரம் நடந்துக்கொண்டு இருந்தபோது கடைக்கும் அருகே உள்ள கழிவுநீர் வடிகாலிலிருந்து வந்த சுமார் 4அடி நீல ஒரு கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று பெட்டிக்கடைக்குள் புகுந்தது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும்இதனை கண்ட கஸ்டமர்களும், கடையில் வேலை பார்த்தவர்களும், உரிமையாளர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இருந்து ஒரு சிலர் அந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த பாம்பு அங்குமிங்கும் பொருட்களுக்குள் ஓடி புகுந்து அச்சுறுத்தியது. கடைத்தெருவில் களேபரம்இதனையடுத்து கடை உரிமையாளர் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு சாதுரியமாக பிடித்து சாக்கு பையில் போட்டு கொண்டு சென்று அடர்ந்த காட்டில் விட்டனர். இதனால் கடைதெருவில் பெரும் களேபரம் ஏற்பட்டது. Related Link கட்டுமானத்திற்கு இது உதவுமா ? எங்க காசெல்லாம் வேஸ்ட்...