கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.