திருவாரூரில் வீடு கட்ட ஒப்பந்தம் செய்துவிட்டு பணியை பாதியில் நிறுத்திய ஒப்பந்தத்தாரருக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. முருகேசன் என்பவர் விளமல் அருகே வீடு கட்டுவதற்காக ஒப்பந்ததாரர் குருமூர்த்தியிடம் 11 தவணையாக 22 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இருப்பினும் அவர் வீடு கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்தியதால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.