நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த உப்பூர் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி திருக்கோவிலில் பாதி எரிந்த நிலையில் மனித தலையுடன் பக்தர் ஒருவர் சாமியாடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உப்பூர் கிராமத்தில் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவில் சாமியாடிகள் சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பிய அவர்கள் எரிந்த நிலையில் இருந்த மனித தலை, கை, கால்களை கொண்டு வந்து சாமியாடியதாக கூறப்படுகிறது.