Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 02:48 AM
By: Srini Vasan

ஆளுநர் தலைமையிலான துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான கேள்விக்கு, திமுக எம்பி டி ஆர். பாலு wait and see என பதிலளித்தார்.
சென்னை சென்டரலில் உள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் மாநாடு குறித்து வினவப்பட்டது.
அதற்கு, சுய நினைவோடு இருப்பவர்கள் நியாயமாக சிந்திப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved