தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுனரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் சராமரியாக கேள்விகளை எழுப்பியதால் நீண்ட தூரம் சென்ற பேருந்தை திருப்பிய ஓட்டுநர் மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டார்.