காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் அட்டை தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 4 மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைபெட்டிகள் எரிந்து நாசமாகின.