சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காச்சங்குடி கண்மாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை என கூறி விவசாயிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். கல்லம்பட்டி பகுதியில் கடைமடை கால்வாய் அரைக்குறையாக வெட்டிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கண்மாயில் திறக்கபடும் தண்ணீர் நெல்பயிர் பாசனத்திற்கு வராமல் உள்ளதால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். முறையாக கால்வாயை வெட்டி கடைமடைக்கு தண்ணீர் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.