Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மூன்று வீடுகள் மற்றும் ஒரு கடையை, நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
அங்கு வசித்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மாற்று இடம் கொடுத்தும், சிலர் வீடுகளை காலி செய்யாமல் வழக்கு தொடர்ந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முறையான அறிவிப்பு கொடுக்காமல் வீடுகளை இடித்ததாக கூறிய குடியிருப்புவாசிகள்,
கடும் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved