நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள எல்லையம்மன் கோயில் பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.