திமுக-வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதால் கட்சி நிர்வாகிகள் கவனமாக பேச வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிர்வாகிகள் இடையேயான கருத்து முரண்பாடை கூட பேச வேண்டாம் என்றும், அதன் மூலமாக கட்சியை பிளவுபடுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எச்சரித்தார்.