Also Watch
Read this
By: Manigandan Raja

காட்பாடி இரயில் நிலையத்திலிருந்து வேன் மூலமாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு, அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு அணிவித்து மரியாதை செய்து பிரச்சாரத்தை தொடங்கி, திறந்தவெளி வாகனத்தில் இருந்தவாறு அவர் வாக்குகளை சேகரித்தார்.
பின்னர் காந்தி நகரில் உள்ள இல்லத்திற்கு சென்று அவருக்கு மனைவி ஆர்த்தி எடுத்து விட்டிற்குள் வரவேற்றார் அவருடைய இரு பேத்திகளும் இரண்டு பக்கமும் அவரை அணைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
இந்த முறை போட்டியிடும் நீங்கள் காட்பாடி தொகுதிக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு என்ன என்ன திட்டங்கள் என்பதை தேர்தல் அறிக்கையில் கூறுவேன். உங்களுடைய மகன் கதிர் ஆனந்த் முதல்முறையாக மாவட்ட பொறுப்பாளராக தேர்தலை சந்திக்கிறார் அது குறித்து கேட்டதற்கு.
பல ஆண்டுகளுக்கு தேர்தல் பணி ஆற்றியவர் எனவே அவருக்கு அந்த அனுபவம் உண்டு. திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்த விஜய் குறித்து கேட்டதற்கு, அவரை எல்லாம் நான் பெரிதாக கருதுவதில்லை.
நான்கு முனை போட்டி நிலவும் சூழலில் தங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என கேட்டதற்கு, எத்தனை முறை போட்டிருந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.
காட்பாடி தொகுதியில் எந்த திட்டமும் செய்யவில்லை என எதிர் கட்சியினர் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டதற்கு காட்பாடி தொகுதியில் என்ன என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும்- அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved