முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், ஆறு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவில் கடல், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் வளாகம் சண்முக விலாசம் மண்டபத்தில் நடைபெற்றது. Related Link வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு